பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!
/

செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

செஸ் விராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 லட்சத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

News image

வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - X

Updated On :27 மே 2026, 11:11 am IST

செஸ் விராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 லட்சத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

ஃபிடே மகளிர் செஸ் உலகக் கோப்பையின் இந்தாண்டுக்கான தொடரில் வைஷாலி கோப்பையை வென்றார். செஸ் போட்டிகளில் பல சாதனைகளை செய்துள்ள வைஷாலி தனது 12 வயதிலேயே செஸ் ஜாம்பவானான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

இந்த நிலையில், வைஷாலிக்கு இன்று தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிதியுதவி வழங்கினார். இதுதொடர்பான தமிழக அரசின் செய்தி அறிக்கையில், “மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், இன்று (27.05.2026) நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது.

உலக தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச மற்றும் அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தேவையான บด நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திறமையான விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் விளையாட்டு போட்டிகளுக்குரிய தேவை அடைப்படியிலான உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெற்றியாளார்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்குத் தலா ரூ.4 இலட்சம் வரை தேவை அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், வெளிநாட்டில் பயிற்சி மற்றும் போட்டி தொடர்பான செலவுகளுக்கு இந்த நிதி உதவுகிறது.

மேலும் பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கருவிகளும் பொருட்களும் வாங்குதல், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுதல், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்றல் போன்றவற்றிற்கு இந்த நிதி உதவுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Minister Adhav Arjuna Grants Financial Assistance of ₹10 Lakhs to Chess Player Vaishali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.