ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டச் செயலாளரும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமார் அறிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு கிரேன் ஓட்டுநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி கட்டடம் இடிக்கும் பணியிலிருந்த தொழிலாளர்களிடம் தனக்கு இலவசமாக செங்கல் மற்றும் ஜல்லி தருமாறு மிரட்டிய தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் ஜெய் என்பவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியானது.
மேலும், அதிரடி உத்தரவாக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டச் செயலாளரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சரத்குமார் தமிழக வெற்றிக் கழகம் கழகத்தின் உரிய ஒப்புதலுடன் அதிரடி உத்தரவாக அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sarathkumar, the Chengalpattu North-West District Secretary and Minister for Human Resources Development, has announced that the TVK functionary who assaulted a JCB operator has been expelled from the party.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










