FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்!

சென்னையில் முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

cm convoy

முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம் - கோப்புப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:15 pm IST

மானாமதுரையில் காவல் மரணமடைந்த ஆகாஷ் உறவினர்கள், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் ஆகாஷ் டெலிஷன் என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல் துறையினா் மீது சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் திலீபன் உள்ளிட்ட 6 காவலா்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிய முதல்வர் விஜய்யின் வாகன அணிவகுப்பை ஆகாஷின் குடும்பத்தினர் இன்று தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் கடற்கரை சாலையில் இன்று பிற்பகல் நடந்தது. முதல்வர் விஜய் காரில் இருந்ததால் அப்பகுதியில் சிறிது பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆகாஷ் உறவினர்களை சாலையிலிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்திய நிலையில், முதல்வரின் வாகனம் புறப்பட்டுச் சென்றது.

Summary

Protest blocking Chief Minister Vijay's car!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.