தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இடைத்தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்: பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்

இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும் என பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர் தெரிவித்திருப்பது பற்றி....

பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர்

Published On :

இடைத்தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெகதான் வெற்றி பெறும் என்று பேரவை துணைத் தலைவா் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

காவல் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் விஜய் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை என த.வெ.க அரசிற்கு ஆதரவு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு: சட்டப்பேரவை விவாதங்கள் சார்ந்து நான் வெளியில் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை வேறு, எங்கள் கட்சியின் கொள்கை வேறு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். திமுக கூட்டணியில் இருந்த போதும் அந்த ஆட்சியை அவர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள். அதேபோலத்தான் எங்கள் ஆட்சியை விமர்சனம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது எப்போது சரி செய்யப்படும் என்கிற கேள்விக்கு தற்போது பதில் அளிக்க முடியாது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது போலியாக பரப்பப்படும் செய்தி. தமிழ்நாட்டில் மின் துறை, மருத்துவ துறை என அனைத்து துறைகளிலும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறதா என்பதை அந்த கட்சியின் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் பணம் வாங்காமல் தற்போது மதுபானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு கடந்த 15 ஆண்டுகளாக இருக்கக்கூடிய வியாதி. அதை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Summary

Not just the by-election, TVK will emerge victorious in all upcoming elections, stated Assembly Deputy Speaker Ravisankar.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.