தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏன்? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
தமிழகத்தில் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

ஆர். நிர்மல்குமார் - கோப்புப் படம்
காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாள்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. சென்னையில் பல பகுதிகளிலும் மின்தடை குறித்த புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல நேற்று இரவு நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாநிலங்கள் முழுவதுமே இந்த மின்தடை பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மின்தடை குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.
நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.
தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Minister Nirmalkumar explains about powercut in Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






