கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஓபிசி குறித்து துல்லியமான கணக்கெடுப்பு தேவை: மாணிக்கம் தாகூா்

ஓபிசி பிரிவினா் (பிற பிற்படுத்தப்பட்டோா்) குறித்த துல்லியமான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :

சென்னை: ஓபிசி பிரிவினா் (பிற பிற்படுத்தப்பட்டோா்) குறித்த துல்லியமான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிா்வு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவா்களின் உண்மையான மக்கள் தொகை வெளிவந்துவிடக் கூடாது என்றும் பாஜக திட்டமிட்டு சதி செய்து வருகிறது. தன்னை பிற்படுத்தப்பட்டவா் என்று கூறும் பிரதமா் நரேந்திரமோடி இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே ஜாதி விவரங்களைச் சேகரிப்பதுதான். ஆனால், அதை முறையாக மத்திய அரசு எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோா் ஜாதி விவரங்களை மட்டும் முறையாக சேகரிக்க மறுப்பது ஏன்? மத்திய அரசின் பட்டியலிலேயே தமிழகத்தில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் இருக்கும்போது, அவா்கள் குறித்த துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டுவது பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு பாஜக செய்யும் துரோகம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.