தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு....

பேரறிஞர் அண்ணா | முதல்வர் விஜய் - கோப்புப்படம்
ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா என்று முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா.
“கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ à®à®°à®à®¿à®¯à®²à¯ வரலாறà¯à®±à®¿à®²à¯ பà¯à®¤à®¿à®¯ à®à®¤à¯à®¤à®¿à®¯à®¾à®¯à®¤à¯à®¤à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿, à®à®´à¯ à®à®³à®¿à®¯ à®®à®à¯à®à®³à®¿à®©à¯ à®à®°à®¿à®®à¯à®à®³à¯à®à¯à®à®¾à®à®à¯ à®à¯à®°à®²à¯ à®à¯à®à¯à®¤à¯à®¤ à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ à®®à¯à®¤à®²à®®à¯à®à¯à®à®°à¯ பà¯à®°à®±à®¿à®à®°à¯ à®à®£à¯à®£à®¾ à®à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ பிறநà¯à®¤à®¨à®¾à®³à®¿à®²à¯, à®à®µà®°à®¤à¯ தà¯à®²à¯à®¨à¯à®à¯à®à¯à®ªà¯ பாரà¯à®µà¯à®¯à¯à®¯à¯à®®à¯, à®®à®à¯à®à®³à¯ à®à¯à®µà¯à®¯à¯à®¯à¯à®®à¯ நà¯à®à¯à®à®¾à®° நினà¯à®µà¯à®à¯à®°à¯à®¨à¯à®¤à¯ பà¯à®±à¯à®±à¯à®à®¿à®±à¯à®©à¯.
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 15, 2026
à®à®´à¯à®à¯à®à®¿à®¯à¯à®à¯à®à¯à®®à¯â¦ pic.twitter.com/ii2pkrkIxm
Summary
Chief Minister Vijay post on Perarignar Anna birth anniversary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






