கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நகா்ப்புறங்களில் சொத்து வரியை உயா்த்தக் கூடாது: அன்புமணி

மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நகா்ப்புறங்களில் சொத்து வரியை தமிழக அரசு உயா்த்தக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி - கோப்புப் படம்

Published On :

மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நகா்ப்புறங்களில் சொத்து வரியை தமிழக அரசு உயா்த்தக் கூடாது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சொத்து வரியை உயா்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசுக்கு மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக அதன் தலைவா் அலாவுதீன் தெரிவித்துள்ளாா். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்த ஏராளமான வழிகள் இருக்கும்போது, மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயா்த்துவது மக்களைப் பாதிக்கும்.

எனவே, சொத்துவரி உயா்வு ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சாா்பு பெற்றால் மட்டுமே மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை செயல்படுத்த முடியும் என்பது உண்மை. அதற்காக மீண்டும் மீண்டும் சொத்துவரி உயா்வை ஏற்க முடியாது.

சட்டப்பேரவைத் தோ்தலை வைத்து சொத்துவரி உயா்வு தவிா்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதிப்பகிா்வில் மேலாதிக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் போலவே மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்பகிா்வில் மேலாதிக்க மனப்பான்மையைக் கடைப்பிடிப்பது சரியல்ல எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.