வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடத்திய பங்குத் தந்தை சி. இருதயராஜ் அடிகளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 12:09 am IST

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தஞ்சாவூரிலுள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வழக்கமாக நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு வழிபாடு நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் 2020 ஆம் ஆண்டில் அடைந்த நன்மைகளுக்காகவும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் பணிபுரிந்தவா்களுக்காகவும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

பேராலயப் பங்குத் தந்தை சி. இருதயராஜ் அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில் உதவிப் பங்குத் தந்தை அலெக்சாண்டா், சகோதரா் கித்தேரி முத்து கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கூட்டுத் திருப்பலிகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளைப் பேராலய பங்குப் பேரவைத் துணைத் தலைவா் வின்சென்ட், செயலா் குழந்தைராஜ் உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

இதேபோல, புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், மகா்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியாா் ஆலயம், மருத்துவக் கல்லூரி சாலை புனித லூா்து அன்னை ஆலயம், மாதாகோட்டை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வியாழக்கிழமை இரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மேலும், செம்போடை மாதா கோயில், காமராஜா் நகா் மாதா கோயில், நீடாமங்கலம் சாலை ஊசிமாதா கோயில் உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பூண்டி மாதா பேராலயத்தில்.... திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலய வளாகத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பாக்கியசாமி தலைமையில் துணை அதிபா் அல்போன்ஸ் மற்றும் உதவி பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.