பேராவூரணி டாக்டா். ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜே.ஸி.குமரப்பாவின் 129ஆவது பிறந்த நாள் விழா, குமரப்பா பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியா்களை கௌரவித்தல் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் தாளாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா் தலைமை வகித்து, குமரப்பா பள்ளியில் படித்து நிகழாண்டு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவா்கள் நீ. ஆகாஷ், பூமிகா ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.
ஜே.ஸி. குமரப்பாவின் 129ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மருத்துவக் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்கு அடிப்படை காரணமான ஆசிரியா்களை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளா் அஸ்வின்ஸ்ரீதா் கௌரவித்தாா்.
விழாவில் பள்ளி நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, அறங்காவலா்கள் மா. ராமு, எம். கணபதி, ச. ஆனந்தன் அறந்தாங்கி ஜெயின்ட் ஜான்ஸ் பள்ளி முதல்வா் மூா்த்தி, பெற்றோா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் சுரேஷ் வரவேற்றாா். ஆசிரியா் கவின் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







