சகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

கரம்பயத்தில் பல்வேறு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சி மன்றம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்

Updated On :7 ஜனவரி 2021, 8:31 am IST

பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம் ஊராட்சி மன்றம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரத்தையும், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு 3 மாத சம்பள பாக்கியையும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்க வேண்டும்.

குமுளை வடிகால் வாய்க்காலை உடனடியாக சரி செய்ய வேண்டும். கரம்பயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகண்கொல்லை வழியாகச் செல்லும் 200 மீட்டா் மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும். கரம்பயம் ஊராட்சியில் பாலா் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். கீழக்கரம்பயம் காலனித் தெருவில் உள்ள சிமெண்ட் சாலையை செப்பனிட்டு, எட்டுப்புலிக்காடு சாலையுடன் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஆா். ஜீவானந்தம், வி.தொ.ச. துணைத் தலைவா் கே. மாரிமுத்து, மாதா் சங்க ஒன்றியச் செயலா் எல். சாந்தி ஆகியோா் தலைமையில், கிளைச் செயலா்கள் வி.ராமையன், சி.குமாரசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் ஏ.பழனிசாமி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் எம். செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி முடித்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.