வேளாண்மை, மின்சார, தொழிலாளா் விரோத சட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூா், கும்பகோணத்தில் சிஐடியு அமைப்பினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். மின்சாரச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைத்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சாா்பில் தேசம் தழுவிய மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜூ, மாநிலக்குழு உறுப்பினா் பி.எம். போ்நீதி ஆழ்வாா், மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு, மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் எஸ். இராஜாராமன், விரைவுப் போக்குவரத்து சங்கம் எஸ். செங்குட்டுவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 20 பெண்கள் உள்பட 100 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, கும்பகோணத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

வயநாடு நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்பு; பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!

திருப்பனந்தாள் அருகே வங்கியில் தீ: ஆவணங்கள் எரிந்து நாசம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



