தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

பொலிவுறு நகரத் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:15 am IST

தஞ்சாவூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இத்திட்டத்தின் கீழ் அரண்மனை வளாகத்தில் நடைபெறும் பணி, கல்லணைக் கால்வாய் அருகே அறிவியல் பூங்கா, பழைய ஆட்சியரகத்தில் 3டி திரையரங்கம், முன் பகுதியில் இசை நீரூற்று, லேசா் லைட் ஷோ அமைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், கல்லணைக் கால்வாய் அருகே உள்ள நடைபாதையில் பெரியகோயிலிலிருந்து ஆற்றுப்பாலம் வரை ஆட்சியா் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலக வளாகம், பொதுப் பணித் துறை அலுவலக வளாகம், பழைய மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

பின்னா் அருளானந்த நகரில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைப்பது குறித்து இடம் தோ்வு செய்வதற்காக நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், நகா்நல அலுவலா் நமச்சிவாயம், வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.