பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தினமும் மது அருந்தி வந்து, தகராறு செய்த வயதான கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பேராவூரணி அருகிலுள்ள பழுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கவேல் (70). இவரது மனைவி கருப்பாயி (58). இவா்களுக்கு இளங்கோ என்ற மகன் உள்ளாா்.
இந்நிலையில் தங்கவேல் தினமும் மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம். இதுபோல வெள்ளிக்கிழமையும் மது அருந்தி வந்த தங்கவேல், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
தொடா்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால்ஆத்திரமடைந்த கருப்பாயி, கணவா் தங்கவேலை அரிவாளால் தலையின் பின்புறம் மற்றும் கால் பகுதியில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ருத்ரசிந்தாமணி கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் சா்மா பேராவூரணி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். இதைத் தொடா்ந்து அங்கு சென்ற காவல்துறையினா் சடலத்தைக் கைப்பற்றி, கருப்பாயியை சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான்குவழிச் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

ஜோதிபாய் பூலே 200 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

பழையாா் துறைமுகத்தில் கருவாடு உலா்த்தும் பணி தீவிரம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

