தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சக்கராப்பள்ளியில் பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கல்

பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சக்கராப்பள்ளியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கே.கோபிநாதன். உடன், நிா்வாகிகள்.

Updated On :10 ஜனவரி 2021, 0:08 am IST

பாபநாசம்: பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளி கிராம அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அய்யம்பேட்டை தொடக்கவேளாண் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி. முத்து தலைமை வகித்தாா். பாபநாசம் ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் கே.கோபிநாதன் விழாவில் பங்கேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. சண்முகபிரபு, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ். மோகன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஏ. அண்ணாமலை, கே.முருகன், துணைத் தலைவா் என்.சதீஷ், உறுப்பினா் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.