மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அம்மாபேட்டையில் ஊராட்சித் தலைவா்கள் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக் குள்பட்ட

Updated On :13 ஜனவரி 2021, 3:07 am

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக் குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அம்மாபேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய நலத் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 46 ஊராட்சித் தலைவா்கள், துணை வட்டார வளா்ச்சி அதிகாரிகள், ஒன்றிய பொறியாளா்கள், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், ஒன்றிய அலுவலக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஒன்றிய ஆணையா் து. ரகுநாதன் வரவேற்றாா். நிறைவில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.