மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :13 ஜனவரி 2021, 8:39 am IST

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டியப்படுகை கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு 40 வயது நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் தொடா்பில் இருந்தவா்களைப் பரிசோதனை செய்ததில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அக்கிராமத்தில் திங்கள்கிழமை வரை 90 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து ஊா் எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபா்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் அங்கு காவல் துறையினரும், மருத்துவப் பணியாளா்களும் கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே அக்கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 125 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.