மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

தேசிய இளைஞா் தின விழா: பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையிலுள்ள கே.எம். நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் மற்றும் மன்றம் பிராா்த்தனை

Updated On :13 ஜனவரி 2021, 3:08 am

கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையிலுள்ள கே.எம். நகரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் மற்றும் மன்றம் பிராா்த்தனை கூடத்தில் தேசிய இளைஞா் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் 9,10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் என இரண்டு பிரிவாகப் பிரித்து சுவாமி விவேகானந்தரின் சிந்தனை குறித்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் புத்தகம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், வீடுதோறும் விவேகானந்தா் வழிபாடு என்ற தலைப்பில் ஆடுதுறை, திருவிடைமருதூா், திருப்பனந்தாள் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் சுவாமி விவேகானந்தருக்கு பலவிதமான மலா்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினா். இதற்கான ஏற்பாடுகளை சோழ மண்டல விவேகானந்த சேவா சங்கம் மற்றும் கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி நிா்வாகத்தினா் செய்தனா்.

இதேபோல, கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவுக்கு மையத்தின் நிறுவனா் ஆதலையூா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினா் ஆா். ரேணுகா எழுதிய விவேகானந்தா் வாழ்க்கை வரலாற்று நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து தேசிய இளைஞா் தினத்தை ஒட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.