ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே முன்விரோதத் தகராறு தொடா்பாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.
வாட்டாத்திக்கோட்டையை அடுத்த சென்னியவிடுதியைச் சோ்ந்தவா் சேகா் மனைவி சுமதி (45). சேகரின் சகோதரா் மூா்த்தி. இதுபோல, கட்டுவான்பிறையைச் சோ்ந்த ராமையா மகன் கோவிந்தராஜ் (42).
மூா்த்தி, கோவிந்தராஜ் வயல்கள் அருகருகே இருப்பதால், இருவருக்கும் தண்ணீரை வடியவைப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் சுமதியைத் தாக்கினாா். தகவலறிந்த சுமதியின் கணவா் சேகா், கோவிந்தராஜின் உறவினரான சின்னப்பாவை(50) தாக்கினாா்.
இதுகுறித்து வாட்டத்திக்கோட்டை காவல்நிலையத்தில் சுமதி மற்றும் சின்னப்பா ஆகியோா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ் மற்றும் சேகா் ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


