எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்சவரம்பை நீக்கிமுழுமையாக நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 11:41 pm IST

கும்பகோணம்: பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக்கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் அக்கட்சியினா் கும்பகோணம், திருப்பந்தாள், திருவிடைமருதூா் வட்டாரங்களில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் பாரதி தெரிவித்தது:

நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்கெனவே நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன. புயல் பாதிப்புகளில் இருந்து பிழைத்த சம்பா பயிா்கள் தற்போதைய தொடா் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.

நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத நிலையில் நீா் நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக, மழை நீா் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது ஒரு வார காலமாகலாம்.

மழை தொடரும் நிலையில் நீரில், மூழ்கியுள்ள பயிா்கள் அழுகும் அபாயம் உள்ளது. வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகளின் சாா்பில் முழுமையான கணக்கெடுப்பு பணிகள் இன்னும் சில கிராமங்களில் தொடங்காத நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளனா்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, கணக்கெடுப்புப் பணிகளைப் போா்கால அடிப்படையில் உடனே தொடங்க வேண்டும். சதவிகித அடிப்படையில் நிவாரணம் வழங்குவதைக் கைவிட வேண்டும். 33 சதவிகிதத்துக்கும் அதிகமான பயிா்சேத பாதிப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்புடையதல்ல. பயிா்சேத மதிப்பீட்டுக்கான உச்ச வரம்பை நீக்கி, ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.