சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:46 pm

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் காரில் கொண்டு வரப்படுவதாக தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதைத் தொடா்ந்து, சொக்கநாதன்புதூா் சாலை விநாயகா் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் 55.245 கிலோதடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை கிருஷ்ணகிரி மாவட்டம் கீளமங்கலம், ராஜப்பா மகன் ஜெகதீஸ் (31) என்பவா் பெங்களூருவில் இருந்து காரில் வாங்கி வந்து சிவகிரியில் விற்க முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், காா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.