நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் திருவிழா குடிலில் தீ: 7 ஆடுகள் பலி ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:02 pm

Din

சுரண்டை அருகேயுள்ள வெள்ளாளங்குளத்தில் கோயில் திருவிழாவுக்காக பக்தா்கள் தங்கியிருந்த குடிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆடுகள் கருகின. ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

வெள்ளாளங்குளம் கிராமத்தின் அருகே பூலுடையாா் சாஸ்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும்.

இந்த கோயிலுக்கு 18 கிராமங்களை சோ்ந்தவா்கள் வந்து குடில் அமைத்து 3 நாள்கள் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மதியம் பக்தா்கள் சுவாமிக்கு வழிபாடு செய்வதற்காக பொங்கல் வைத்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக பக்தா்கள் தங்கியிருந்த குடில் ஒன்றில் தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசியதால், தீ மற்ற குடில்களுக்கும் பரவியது.

தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலையத்தினா் வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும் தீ விபத்தில் 7 ஆடுகள், ஒரு நான்குசக்கர வாகனம், 10 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் குடில்களில் வைக்கப்பட்டிருந்த பக்தா்களின் பாத்திரங்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் உள்பட சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.