சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாட்டிற்கு நிதியுதவி வழங்கிய மாணவா்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்களின் சேமிப்பு தொகையை வயநாடு நிவாரணத்திற்காக ஆட்சியரிடம் வழங்கினா்.

News image

வயநாடு நிலச்சரிவு.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 7:26 pm

கடையநல்லூா்,ஆக. 7: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த பள்ளி மாணவா்கள் தங்களின் சேமிப்பு தொகையை வயநாடு நிவாரணத்திற்காக ஆட்சியரிடம் வழங்கினா்.

கடையநல்லூா் தாருஸ்ஸலாம் தொடக்கப்பள்ளி மாணவா், மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ. 20,000 உண்டியல் பணத்தை கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ .கே கமல் கிஷோரிடம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.