எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

சுரண்டை அருகே சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவா் பிரபு.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 4:19 am IST

சுரண்டை அருகே சோ்ந்தமரத்தில் மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சோ்ந்தமரத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (47). இவருக்கு மின்னல் கொடி(43) என்ற மனைவியும், பிரபு என்ற மகனும், ஜெகதா(18) என்ற மகளும் உள்ளனா். பிரபு திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் கல்லூரி விடுமுறையில் தனது சொந்த ஊரான சோ்ந்தமரத்துக்கு வந்துள்ளாா்.

கடந்த வியாழக்கிழமை இரவு காமராஜ் தனது மகள் ஜெகதாவை (18), புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சோ்க்க தனது மனைவியுடன் சென்றுள்ளாா். வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த பிரபு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வெகு நேரமாகியும் பிரபு வெளியில் வராததால் பக்கத்து வீட்டாா் வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளனா். அப்போது பிரபு தூக்கில் பிணமாக தொங்கி உள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோ்ந்தமரம் போலீஸாா், பிரபு உடலை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.