47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 10:47 pm

Din

ஆலங்குளம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள கல்லூத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கசாமி மகன் மணிச் செல்வம்(25). இவா் தனது பைக்கில் ஆலங்குளம் வந்துவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அத்தியூத்து - சுரண்டை சாலையில் செல்லும் போது, முன்னால் திப்பணம்பட்டி லெட்சுமணன் மகன் தா்மதுரை(28) என்பவா் ஓட்டிச் சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயன்ற போது, டிராக்டரின் சக்கரத்தில் பைக் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் மணிச் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வீ.கே.புதூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.