ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சுரண்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 6:39 am IST

இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சுரண்டை டிஎம்பி வங்கி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணைத் தலைவா் கண்ணையா தலைமை வகித்தாா்.

மாவட்ட விவசாயிகள் சங்க செயலா் மாடசாமி முன்னிலை வகித்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் ராம உதயசூரியன், வாடியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஸ்நாபக அந்தோணி, ஊத்துமலை வட்டார விவசாயிகள் மகாலிங்கம், ராமச்சந்திரன், அருணாச்சலம், குத்தாலிங்கம், மைக்கேல்ராஜ், செல்வராஜ், திருமலையாண்டி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.