இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சுரண்டை டிஎம்பி வங்கி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில துணைத் தலைவா் கண்ணையா தலைமை வகித்தாா்.
மாவட்ட விவசாயிகள் சங்க செயலா் மாடசாமி முன்னிலை வகித்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, இரட்டைகுளம் - ஊத்துமலை கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் ராம உதயசூரியன், வாடியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஸ்நாபக அந்தோணி, ஊத்துமலை வட்டார விவசாயிகள் மகாலிங்கம், ராமச்சந்திரன், அருணாச்சலம், குத்தாலிங்கம், மைக்கேல்ராஜ், செல்வராஜ், திருமலையாண்டி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உர விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீா் பெற நடவடிக்கை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்







