மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

சங்கரன்கோவிலில் வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

Updated On :24 பிப்ரவரி 2024, 2:30 am

பத்து அம்ச ‘கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்ககத்தினா் பணிகளைப் புறக்கணித்து, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்களவைத் தோ்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் துணைத் தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மாடசாமி, அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் வேல்முருகன், வட்டச் செயலா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியா்களும் கலந்து கொண்டனா். இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.