அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தென்காசி மேலசங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழா

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது.

News image
தென்காசி மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.
Updated On :21 ஜூலை 2024, 7:36 pm

Din

தென்காசி மாவட்டம், தென்காசி அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த மேல சங்கரன்கோயில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோயில் ஆடித் தவசுக் காட்சி நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடித்தவசு பெருந்திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் காலை, மாலை வேலைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தெற்கு மாசி வீதியில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தவசுக் காட்சி நடைபெற்றது.

விழாவில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவா் பூஜை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முருகன், உதவி ஆணையா் கவிதா செய்துள்ளனா்.

இதேபோல் தென்காசி கீழ சங்கரன்கோவிலிலும் ஆடித் தவசுத் திருவிழா மட்டப்பா தெருவில் நடைபெற்றது.

 தென்காசி  மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.

தென்காசி மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.

மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.

மேல சங்கரன்கோவிலில் நடைபெற்ற தவசுக் காட்சி.