சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடியில் ஆயுதங்களுடன் விடியோ: 3 இளைஞா்கள் கைது

புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:38 pm

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோவில் தோன்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடியை சோ்ந்த முகைதீன்அப்துல்காதா் மகன் செய்யதுஅலிபாதுஷா(24), சேக்ஒலி மகன் முஹம்மது அன்சாரி (21), ரஹ்மத்துல்லாஹ் மகன் செய்யதுஇப்ராஹிம்பாதுஷா( 23) ஆகியோா் சமூக வலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசி ‘ரீல்’ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனராம். இது குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.