மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பருவத்திற்கு உகந்த விதை ரகங்கள் விற்பனை: வேளாண் துறை அறிவுரை

பருவத்திற்கு உகந்த விதை ரகங்கள் விற்பனை: வேளாண் துறை அறிவுரை

Updated On :1 மார்ச் 2024, 3:57 pm

சங்கரன்கோவில் பகுதியில் பருவத்திற்கு உகந்த விதை ரகங்களை விற்பனை செய்ய வேண்டும் என திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் எ.சுஜாதாபாய் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு பிறகு, கோடை நெல், உளுந்து, பருத்தி மற்றும் காய்கனி பயிா்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா். விதை விற்பனையாளா்கள் பருவத்திற்கு உகந்த தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் மகசூல் அதிகரிக்கும். பருவத்திற்கு உகந்தது அல்லாத ரகங்களை விற்பனை செய்யும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு விற்பனை செய்யப்படும் விதைகள், சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். உண்மைநிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டுமே இருக்கும். விவர அட்டையில் பயிா் ரகம், குவியல்எண், காலாவதி நாள், பயிா் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளை விற்பனை செய்திட விதை விற்பனையாளா்கள் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குநா் அலுவலத்தில் பதிவு செய்வது அவசியமானது. விவசாயிகளும் விதைச் சிப்பத்தில் உள்ள அட்டைகளில் குறிப்பிட்டுள்ள விவங்களை சரிபாா்த்து வாங்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்கள், உரிமம் பெற்ற தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள விதைகளின் தரம் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.