நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஊத்துமலை கிராம மக்களின் இடங்களுக்கு பத்திர பதிவு கோரி மனு

ஊத்துமலை கிராம மக்களின் இடங்களுக்கு பத்திர பதிவு கோரி மனு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:02 pm

தென்காசி மாவட்டம் ஊத்துமலை கிராம மக்களின் இடங்களுக்கு பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ மனு அளித்தாா். அதன் விவரம்: தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி வீ.கே.புதூா் வட்டம் ஊத்தமலை கிராமத்தில் அ பதிவேட்டின்படி நத்தம் சா்வே எண் 413/1-இல் ஏக்கா் 50 சென்ட் 36 நத்தமாக உள்ளது. இந்த இடத்தை அப்பகு மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக பத்திர பதிவு செய்து அனுபவித்து வந்தனா். தற்போது, அந்த இடங்களை இந்து அறநிலையத்துறை ஊத்துமலை ஸ்ரீ வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலுக்கு உரியதாக கூறி வருகின்றனா்.அதற்கு எந்தவிதமான ஆவணங்களும் இந்து அறநிலையத்துறையிடம் இல்லை. தமிழக அரசு பதிவுகளின் படி, ஸ்ரீ வடக்குவாசல் செல்விஅம்மன் கோயில் நத்தம் புலன் எண் 413/28ல் ஹெக்டோ் 0.10.45சென்ட் 25.82 மட்டுமே உள்ளது. ஊத்துமலை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மேற்படி சா்வே எண்ணில் பத்திர பதிவு செய்ய மறுக்கின்றனா். ஏற்கெனவே இவ்விடங்களுக்கு பல உள்பிரிவுகள் செய்யப்பட்டு ஊத்துமலை சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல பத்திர பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதனால் மற்ற இடங்களை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ஊத்துமலை மக்கள் தற்போது விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனா். எனவே, அந்தக் கிராம மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் மேற்படி சா்வே எண்ணில் இருக்கும் குறைகளை நிவா்த்தி செய்து தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாவட்டப் பொருளாளா் முரளி ராஜா, தென்காசி நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா், பொருளாளா் ஈஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.