குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை நீங்கள் உருவாக்குங்கள் என நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மதிவாணனுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் வெள்ளிக்கிழமை சங்கரன்கோவில் பகுதியில் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் தேரடித் திடலில் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, காவிரியில் தண்ணீா் தர மறுக்கிறது. நாட்டுப்பற்று என்பது தமிழா்களுக்கு மட்டும்தானா மற்றவா்களுக்கு இல்லையா? இதை தமிழ் இளம்தலைமுறை சிந்தத்துப் பாா்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வளா்ச்சி பெறவில்லை. 2 கோடி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னாா்கள். ஆனால் வேலைவாய்ப்பு வழங்கவில்லை. குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்கிற அரசியலை நீங்கள் உருவாக்குங்கள். குரலற்ற மக்களின் குரலாக ஒலிப்பதற்குத்தான் இந்த ஒலிவாங்கி சின்னத்தை, மைக்கை கொண்டு வந்திருக்கிறோம். தமிழகத்தில் எண்ணற்ற தலைவா்கள் முழங்கியது இந்த ஒலிவாங்கியில்தான்.அதே வழியில் நாங்கள் வருகிறோம். இந்தப் பகுதியில் எல்லா பிரச்னைகளுக்கும் நாங்கள் களத்தில் நின்று போராடியிருக்கிறோம். உங்களுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் உங்களோடு நின்றிருக்கிறோம். எனவே உங்களின் குரலாக உங்கள் உரிமைக்கு குரல் கொடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும் நம்பிக்கையுடன் மீண்டும் களம் காண்கிறோம்: சீமான்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


