சுரண்டை அருகே மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

சுரண்டை, மே 9: சுரண்டை அருகே வியாழக்கிழமை மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள குலையநேரியைச் சோ்ந்த முருகன் மகன் சிவசக்தி(15). பங்களாச்சுரண்டையில் உள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளாா்.

சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் காலநிலை மாறி இடி, மின்னலுடன் வானம் காணப்பட்டது. இதில் சிவசக்தியை மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் விரைந்து சென்று சிவசக்தியின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com