அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

News image
Updated On :16 மே 2024, 11:01 pm

Din

ஆலங்குளம், மே 16:

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் 9 பவுன் நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அண்ணா நகரைச் சோ்ந்த மோகன்தாஸ் மனைவி சாந்தி (54). அடைக்கலப்பட்டணத்தில் உள்ள கீழப்பாவூா் மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளா். இவா், வியாழக்கிழமை அலுவலகத்தில் வசூலான மின் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு ஆலங்குளத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

அத்தியூத்து தனியாா் பொறியியல் கல்லூரி அருகே பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா், சாந்தி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டாராம். அதன் மதிப்பு சுமாா் ரூ. 4.75 லட்சம் எனக் கூறப்படுகிறது.

புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.