விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

புளியறையில் பிடிபட்ட 10 அடி நீள ராஜநாகம்

News image
Updated On :26 மே 2024, 7:22 pm

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியறை பகுதியில் 10அடி நீள ராஜநாகம் பிடிபட்டது.

புளியறையில், ராபா்ட் என்பவரது வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூரை ஷெட்டில் 10 அடி நீள ராஜநாகம் இருப்பதாக செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சிறப்பு அலுவலா் மாரியப்பன் தலைமையிலான சண்முகவேல், சந்திரமோகன், மணிகண்டன், கோமதிசங்கா், காா்த்தி உள்ளிட்ட வீரா்கள் சென்று, ராஜநாகத்தைப் பிடித்து, செங்கோட்டை வனவா் முருகேசனிடம் ஒப்படைத்தனா். பின்னா், ராஜநாகம் வனப் பகுதியில் விடப்பட்டது.