நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

Updated On :1 நவம்பர் 2024, 8:11 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. தீபாவளி விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலையின் உள்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால், பிற்பகலில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து தடை விலக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். விடுமுறை தினம் என்பதால் சுற்றலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.