எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த செயல்விளக்கப் பயிற்சி

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சிஅண்மையில் நடைபெற்றது.

News image

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கமளிக்கிறாா் தோட்டக்கலை விஞ்ஞானி இளவரசன்

Updated On :6 மே 2025, 12:03 am IST

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சிஅண்மையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகளான மஞ்சள் நிற அட்டை கட்டும் முறை, என்காா்சியா ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறை, அபொ்டோ கிரைசா இரை விழுங்கி முட்டைகள் பயன்படுத்தும் முறை, கரும்பூசணத்தை நீக்க மைதா மாவு கரைசல் தெளிக்கும் முறை ஆகியவை குறித்தும் ,நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை விஞ்ஞானி இளவரசன் செயல்முறை விளக்கம் அளித்தாா்.

இதில் தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி, உதவி தோட்டக்கலை அலுவலா் சண்முகவேல்ராஜன், அரியநாயகிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.