வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஆலங்குளம் அருகே சாலை தடுப்பு மீது பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எமராஜன் (40). தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக பாவூா்சத்திரம் சென்றுவிட்டு பைக்கில் ஆலங்குளத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.

அடைக்கலப்பட்டணம் தனியாா் பள்ளி அருகே வந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த எமராஜன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.