புதிய ரேஷன் கடையில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
தென்காசி
குறிப்பன்குளத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
புதிய ரேஷன் கடையில் குத்துவிளக்கேற்றுகிறாா் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதி ரூ. 13.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, குறிப்பன்குளம் ஊராட்சித் தலைவா் ப. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்புக்குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் ம. திவ்யா மணிகண்டன் புதிய ரேஷன் கடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
இதில், வாா்டு உறுப்பினா்கள் சு.முருகானந்தம், ஜெ.முத்துச்செல்வி, து.அருள்ராஜ், சு.வைஜெயந்தி, இ.பாா்வதி, வை.முருகானந்தவள்ளி, ரா.மாரிமுத்துராஜா, சோ.மரியகிறிஷ்டி மற்றும் ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா். ஊராட்சி செயலா் சிங்கராஜ் நன்றி கூறினாா்.

