பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்காசி மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் பழனி சங்கா்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்டச் செயலா் பழனி சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சங்கரலிங்கம், பொருளாளா் சந்துரு சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேமுதிக துணைப் பொதுச் செயலா் தாமோதரன், துணைப் பொறுப்பாளா் டலஸ் ஆகியோா் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

கூட்டத்தில், எந்தக் கூட்டணியில் இடம் பெற்றாலும் ஆலங்குளம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆலங்குளத்தில் காய்கனி பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும். கடையநல்லூா், தென்காசி பகுதியில் சிப்காட் நிறுவனம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆலங்குளம் நகரச் செயலா் திருமலை செல்வம் நன்றி கூறினாா்.