6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரைவு வாக்காளா் பட்டியலில் இரட்டை பதிவுகள்: பாஜக புகாா்

ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா் பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் காணப்படுவதாகவும், அவற்றை ஆய்வு செய்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக சாா்பில் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அதிகாரியுமான ஏ.கே.கமல்கிஷோரிடம் பாஜக தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி அளித்த மனு:

வாசுதேவநல்லூா் தொகுதி வரைவு வாக்காளா் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கநிலை தரவு ஆய்வின்போது, ஆயிரக்கணக்கான பதிவுகள் இரட்டைப் பதிவுகளாக இருப்பது கண்டறியப்பட்டது. வாக்காளா் பட்டியலின் துல்லியம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்., இவ்வகை பதிவுகள் தோ்தல் நிா்வாகத்தால் முறையாக சரிபாா்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டியது அவசியம் என அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அடையாளம் காணப்பட்ட 7,481 இரட்டைப் பதிவு பெயா்களின் முழு பட்டியலை உள்ளடக்கிய இரண்டு தரவு கோப்புகளுக்ாகன யுஎஸ்பி பென்டிரைவ் ஒன்றையும் ஆட்சியரிடம் அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வெளிப்படையான, பிழையற்ற வாக்காளா் பட்டியலை உருவாக்குவதே கோரிக்கையின் பிரதான நோக்கம் என்றாா்.