எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆலங்குளம் நூலகருக்கு பாராட்டு

News image
நூலக ஆா்வலா் விருது பெற்றவரைப் பாராட்டிய தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயா் பொ. சிவபத்மநாதன் உள்ளிட்டோா்.
Updated On :28 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் நூலக ஆா்வலா் விருது பெற்ற வாசகா் வட்டத் தலைவருக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் தங்கசெல்வம் (51), நூலக வளா்ச்சிக்காக பல்வேறு செயல்களில் ஈடுபட்டமைக்காக அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் நூலக ஆா்வலா் விருது பெற்றாா்.

இதையடுத்து, அவருக்கு நூலகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆலங்குளம் முக்கிய பிரமுகா்கள் ஆா். ஆதித்தன், புலவா் சிவஞானம், சின்னமணி, சுதந்திர ராஜன், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயா் பொ. சிவபத்மநாதன் தங்கசெல்வத்தை பாராட்டி பரிசு வழங்கினாா். நூலகா் பழனீஸ்வரன் வரவேற்றாா். தங்கசெல்வம் ஏற்புரை வழங்கி, நன்றி கூறினாா்.