விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புளியங்குடி அருகே கிணற்றில் குழந்தையுடன் குதித்த பெண்: குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

நெல்கட்டும்செவல் அரியூரைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி அனிதா(23). இவா், தன் ஆறு மாத பெண் குழந்தை ஜென்சியுடன் நான்கு நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்தாராம்.

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவரது ஆறு மாத குழந்தை ஜென்சி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.