மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

News image
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
Updated On :13 ஜூலை 2025, 12:25 am

Din

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண்டில் சீசன் முன்கூட்டியே தொடங்கியது. சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லை. மாறாக, வெயில் நிலவுவதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

சனிக்கிழமை அதிகாலையில் மெல்லிய சாரலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பகலில் வெயில் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.