ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :13 ஜூலை 2025, 5:55 am IST

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண்டில் சீசன் முன்கூட்டியே தொடங்கியது. சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக, குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லை. மாறாக, வெயில் நிலவுவதால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது.

சனிக்கிழமை அதிகாலையில் மெல்லிய சாரலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பகலில் வெயில் நிலவியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.