திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் விளையாட்டு விழா

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம்.

News image

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம்.

Updated On :3 மே 2025, 12:21 am IST

ஆலங்குளம் அருகே நல்லூா் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் 28ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். நல்லூா் சேகரத் தலைவா் ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா்.

தங்க பிரபு தொடக்க ஜெபம் செய்தாா்.

ஆலங்குளம் தொழிலதிபா் பிரின்ஸ் தங்கம் தலைமை விருந்திரனராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினாா்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்வியியல் கல்லூரி தாளாளா் கேபிகே செல்வராஜ், கதீட்ரல் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் டேவிட் சாலமோன், இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலை பள்ளிக் தாளாளா் ஜேகா், தென்னிந்திய திருச்சபை செனட் குழு அங்கத்தினா் மகாராஜா சிங், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் சைரஸ், அமிா்தராஜ், கிருபாகரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கல்லூரி தாளாளா் ஜேசு ஜெகன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வில்சன் நன்றி கூறினாா்.

உடற்கல்வி இயக்குநா் ஜுலியன்ஸ் ராஜா சிங் விளையாட்டுத் துறைக்கான ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.