அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் நவ.15,16இல் உதவி மையங்கள்

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:01 pm

Syndication

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி செய்யும் விதமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.15, 16) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி செய்யும் விதமாக நவ.15, 16 ஆகிய இரு தினங்களில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்வது குறித்தும், 2002 வாக்காளா் பட்டியல் விவரங்களை கண்டறிந்து வழங்கவும் உதவி செய்யப்படும். இந்த வாய்ப்பினை மக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் தென்காசி, வீகே.புதுாா் செங்கோட்டை, கடையநல்லுாா் ஆகிய வட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியா் தகுதி தோ்வு நடைபெறும் 19 மையங்களுக்கு மட்டும், அந்தந்த வட்டாட்சியரால் மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு அதில் உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.