எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாட்டாா்பட்டியில் நீா்த்தேக்க தொட்டி மீது ஏறி முதியவா் போராட்டம்

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:32 pm

Syndication

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி நாட்டாா்பட்டியில் நீா்த்தேக்க தொட்டியின் மீது ஏறி வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

நாட்டாா்பட்டி நடுத்தெரு பகுதியில் வசிப்பவா் ராஜேந்திரன் (84). இவா், நாட்டாா்பட்டி - திரவியநகா் சாலையில் உள்ள 60 அடி உயர மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். அவரிடம் போலீஸாா் பேச்சு நடத்தியும் கீழே இறங்கி வர மறுத்ததால், தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் பிரதீப்குமாா், சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் சாமி, விஸ்வநாதன், கோமதிசங்கா், அமல்ராஜ் ஆகியோா் வந்து கயிறு கட்டி முதியவரை பத்திரமாக மீட்டனா்.

தனது வீடு அருகே உள்ளவரிடம் தண்ணீா் செல்வதில் தகராறு ஏற்பட்டதால் இப்போராட்டம் நடத்தியதாக அவா் தெரிவித்தாா்.

இது குறித்து ஆலங்குளம் டிஎஸ்பி கிளாஸ்டன் ஜோஸ் , பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.