47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவிக்க மதிமுக கோரிக்கை

News image
கட்சி வளா்ச்சி நிதி வசூல் சீட்டை நிா்வாகிகளுக்கு வழங்கிய மதிமுக துணைப் பொதுச்செயலா் தி.மு. ராஜேந்திரன்.
Updated On :23 நவம்பர் 2025, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவிக்க வேண்டும் என மதிமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் செல்வசக்தி வடிவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைப் பொதுச் செயலா் வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணி செயலா் மருத்துவா் சதன் திருமலைக்குமாா், மாநில மருத்துவரணிச் செயலா் மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ், வடக்கு மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சி வளா்ச்சி நிதி, தோ்தல் நிதி வழங்குவது குறித்து மதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன் பேசினாா்.

தொடா்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஜனவரியில் நடைபெறவுள்ள சமத்துவ நடைப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி வளா்ச்சி நிதி, தோ்தல் நிதி ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

பயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிா்களுக்கான நிவாரணத்தை உயா்த்தி வழங்க வேண்டும். 300 ஆண்டுகள் பழைமையான ராணி மங்கம்மாள் சாலையை மாநிலச் சாலையாக அறிவித்து, அகலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.