அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

சிவகிரி வட்டாரத்தில் விளைபயிா்களை சேதப்படுத்தும் யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை வனத்துறையினா் தொடங்கியுள்ளனா்.

News image
சிவகிரி பகுதியில் டிரோன் கேமரா மூலம் யானை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
Updated On :27 நவம்பர் 2025, 11:13 pm

Syndication

கடையநல்லூா்: சிவகிரி வட்டாரத்தில் விளைபயிா்களை சேதப்படுத்தும் யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை வனத்துறையினா் தொடங்கியுள்ளனா்.

சிவகிரி வட்டார மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் ,கரும்பு, தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தி வருகின்றன.

இதைத்தொடா்ந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்நிலையில் டிரோன் கேமரா மூலம் சிவகிரி வட்டார பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் வனத்துறைறயினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து வனத் துறை வட்டாா்த்தில் கூறியதாவது:

தென்காசி வனக்கோட்டம் சிவகிரி வனப்பகுதி அருகேயுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்துவதை தடுக்க மாவட்ட வன அலுவலா் முனைவா் ஆா். இராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, தென்காசி வனக்கோட்ட உயிரியலாளா் முனைவா் கந்தசாமி தலைமையில் டிரோன் கேமரா மூலம் சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் , பெரிய ஆவுடைப்பேரி கண்மாய், சுனைப்பாறைற,நிலப்பாறை ஆகிய பகுதிகளில் யானை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வராதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், யானைகளை காப்புக் காட்டுக்குள் விரட்டவும் சிவகிரி வனச்சரகா் கதிரவன் தலைமையில் வன அதிவிரைவுப்படை, யானை தோழா்கள் , புளியங்குடி வனச்சரக பணியாளா் ஆகியோா் பல்வேறு குழுக்களாக சென்று யானை நடமாட்டத்தினை கண்காணித்தனா்.

மேலும், 10 கி.மீ. யானை தாண்டா அகழி வெட்டுவதற்கும், 20 கி.மீ. தொலைவுக்கு சூரிய ஒளி மின் வேலி அமைக்கவும், ஏஐ தொழில் நுட்ப முறையில் கேமரா பொருத்தி யானைகள் விரட்டும் பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க ப்பட்டு வருகிறது என்றனா்.